Saturday, June 27, 2009

தீவிரவாதம் - தேவை ஓர் மகாத்மா


சாத்தான்களின் இந்த வாதம்
சமுதாயத்தின் முடக்கு வாதம்
சில முட்டாள்களின் தவறிய நோக்கம்

பல இடங்களில் குண்டு வெடிப்பு
தேச துரோகிகளின் நல்ல நடிப்பு

மரணக் கட்டிலில் அனாதைகள் பிரசவிக்கப் படுகிறார்கள்
சாவுக் கோலத்தில் விதவைகள் உருவாக்கப் படுகிறார்கள்

ஓ கல் நெஞ்சே !
இவர்களின் கூக்குரல் உங்களுக்கு கேட்கவில்லையா?

வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்றோம் இந்த
கொள்ளயரிடமிருந்து சுதந்திரம் பெற தேவை
மீண்டும் ஓர் மகாத்மா!

தேவை ஓர் மகாத்மா

No comments:

Post a Comment