Tuesday, June 30, 2009

நாடோடிகள்



அடுக்கு மாடி கட்டிடம் கட்டுபவர்கள் நாங்கள்
நடுத் தெருவே எங்கள் நிரந்தர பங்களா

கட்டிடங்கள் பல உயர்த்தினாலும்
நாங்கள் தாழ்வாகவே இருக்கிறோம்

சாலை பணி செய்து மக்களின் பயணத்தை துரிதமாக்கினாலும்
எங்களின் வாழ்க்கை பயணம் மெதுவாகவே செல்கிறது

நாடோடிகளாய் திரியும் எங்களுக்கு
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது சாலப் பொருந்தும்

"டெண்டெர்" எடுக்கும் முதலாளியே
சுங்க வரி வசூலிப்பதில் பங்கு கேட்கவில்லை நாங்கள் மாறாக எங்கள்
"Tender"களை படிக்க வையுங்கள் என்றுதான் கேட்கிறோம்

எங்கள் குழந்தைகளின் குரல் கேட்கிறதா?
இப்படிக்கு நாடோடிகள்...









No comments:

Post a Comment