Wednesday, July 22, 2009

செல் போன் கூத்து


காற்றை விற்று கவிதை பேசுவோம்

"Missed Call" கொடுத்து அதிர வைப்போம்


"Nokia" விழிகளில் "SMS" பேசுவோம்

கல்லூரி மாணவர்களின் ஏழாம் அறிவு


"அய்யர் பூஜையில்" கையடக்க "கரடி"

பாட்டிகளுக்கும் கொடுப்போம் ஓர் "Blue Tooth"


பாரிமுனையில் இருந்துகொண்டு

தெருமுனையில் இருப்பதாக "உண்மை" விளம்புவோம்


பால்காரன் முதல வேலைகாரி வரை

யாரையும் விடவில்லை இந்த செல் பித்து


இருபதாம் நூற்றாண்டின் அற்புதமே

நீ தொலை பேசியா அல்லது தொல்லை பேசியா?