Sunday, December 4, 2016

கட்டிட தொழிலாளர்கள்



கட்டிட தொழிலாளர்கள்


பத்து மாடி கட்டிடம் கட்டியவர்கள் நாங்கள்

இருப்பதுவோ ஓலை வேய்ந்த குடில்களில்



மற்றவர்களை உயரச் செய்து

நாங்கள் தாழ்வாகவே இருக்கிறோம்



கட்டிடங்களை உயர்த்துகிறோம் ஆயினும்

எங்கள் வாழ்க்கை தரம் உயர்வதில்லை



பத்து மாடி கட்டிடம் கட்டியவர்கள் நாங்கள்

ஓலை வேய்ந்த குடிலே எங்கள் நிறைந்த பங்களா



ஆனந்த் வாசுதேவன்

Thursday, March 3, 2016

புரிதல் துவங்கட்டும்!  

சுழலும் பூமியில் 
உழலும் மனிதா - சற்று நில்

எங்கே விரைகிறாய்
எதை தேடுகிறாய் - சற்று அமர்

அமைதியின்றி வாழ்கிறாய்
நிம்மதியின்றி உறங்குகிறாய் - சற்று யோசி

நீ யார் என்பதை தெரிந்து கொள்
வெளி மனதை உள்ளே திருப்பு - சற்று சிந்தி

அனைத்தும் அவனே 
அதில் நீயுமோர் துளி - சற்று உணர்

சரணடைந்து பக்தி செய்
அனைவரிடம் அன்பு செய் - புரிதல் துவங்கட்டும்!  

ஆனந்த் வாசுதேவன்
28.02.2015