சுழலும் பூமியில்
உழலும் மனிதா - சற்று நில்
எங்கே விரைகிறாய்
எதை தேடுகிறாய் - சற்று அமர்
அமைதியின்றி வாழ்கிறாய்
நிம்மதியின்றி உறங்குகிறாய் - சற்று யோசி
நீ யார் என்பதை தெரிந்து கொள்
வெளி மனதை உள்ளே திருப்பு - சற்று சிந்தி
அனைத்தும் அவனே
அதில் நீயுமோர் துளி - சற்று உணர்
சரணடைந்து பக்தி செய்
அனைவரிடம் அன்பு செய் - புரிதல் துவங்கட்டும்!
ஆனந்த் வாசுதேவன்
28.02.2015