Thursday, March 3, 2016

புரிதல் துவங்கட்டும்!  

சுழலும் பூமியில் 
உழலும் மனிதா - சற்று நில்

எங்கே விரைகிறாய்
எதை தேடுகிறாய் - சற்று அமர்

அமைதியின்றி வாழ்கிறாய்
நிம்மதியின்றி உறங்குகிறாய் - சற்று யோசி

நீ யார் என்பதை தெரிந்து கொள்
வெளி மனதை உள்ளே திருப்பு - சற்று சிந்தி

அனைத்தும் அவனே 
அதில் நீயுமோர் துளி - சற்று உணர்

சரணடைந்து பக்தி செய்
அனைவரிடம் அன்பு செய் - புரிதல் துவங்கட்டும்!  

ஆனந்த் வாசுதேவன்
28.02.2015