பத்து மாடி
கட்டிடம் கட்டியவர்கள் நாங்கள்
இருப்பதுவோ ஓலை
வேய்ந்த குடில்களில்
மற்றவர்களை உயரச்
செய்து
நாங்கள்
தாழ்வாகவே இருக்கிறோம்
எங்கள் வாழ்க்கை
தரம் உயர்வதில்லை
பத்து மாடி
கட்டிடம் கட்டியவர்கள் நாங்கள்
ஓலை வேய்ந்த
குடிலே எங்கள் நிறைந்த பங்களா
ஆனந்த் வாசுதேவன்