Sunday, December 4, 2016

கட்டிட தொழிலாளர்கள்



கட்டிட தொழிலாளர்கள்


பத்து மாடி கட்டிடம் கட்டியவர்கள் நாங்கள்

இருப்பதுவோ ஓலை வேய்ந்த குடில்களில்



மற்றவர்களை உயரச் செய்து

நாங்கள் தாழ்வாகவே இருக்கிறோம்



கட்டிடங்களை உயர்த்துகிறோம் ஆயினும்

எங்கள் வாழ்க்கை தரம் உயர்வதில்லை



பத்து மாடி கட்டிடம் கட்டியவர்கள் நாங்கள்

ஓலை வேய்ந்த குடிலே எங்கள் நிறைந்த பங்களா



ஆனந்த் வாசுதேவன்

No comments:

Post a Comment